பிக்குமாரால் தாக்கப்பட்ட சிறுவன் வைத்தியசாலையில்..
சிறுவன் ஒருவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் புத்தளம் மாவட்டம், சிலாபம் பகுதியைச் சேரந்த இரு பிக்குகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலாபம் கொஸ்வத்தை பிரதேச விகாரை ஒன்றினைச் சேர்ந்த இரு பிக்குகளே குறித்த சிறுவனைத் தாக்கிய சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு பிக்குகள் தன்னைத் தாக்குவதாகக் கூறியபடியே விகாரையிலிருந்து சிறுவன் ஒருவன் வெளியே வருவதனைக் கண்டு, விகாரையின் அயலவர் ஒருவர் பொலிஸாருக்கு முறைப்பாடு தெரிவித்ததுடன் அந்தச் சிறுவனையும் கொஸ்வத்தை பொலிஸில் ஒப்படைத்திருந்தார். இதனையடுத்தே சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் இரு பிக்குகளையும் கைது செய்துள்ளனர்.தொக்குதலுக்கு இலக்கான சிறுவன் தற்போது மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்தச் சிறுவனின் தாய் வெளிநாடு சென்றுள்ள நிலையில் அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த அந்த அவனது தந்தை அவரை விகாரையில் ஒப்படைத்திருந்தார் எனத் தெரியவருகிறது. பிக்குமாரை நீதிமன்றில் ஆஜர்செய்ய பொலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Average Rating