கொழும்பில் கடத்தப்பட்ட சொகுசு வேன் வவுனியாவில் மீட்பு
Read Time:1 Minute, 15 Second
கொழும்பில் கடத்தப்பட்ட வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான அதி சொகுசு வாகனம் வவுனியா கோவில்குளத்தில் வைத்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு கொம்பனித்தெருவில் வைத்து கடந்த 31ஆம் திகதி கடத்தப்பட்ட இந்த நேற்றையதினம் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் பலனாக வவுனியாவில் வைத்து அவ் வாகனம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி பண்டார ஜெயதிலக மற்றும் பொலிஸ் பரிசோதகர் சிறிவர்த்தன தலைமையிலான குழுவினரே இக்கடத்தல் சம்பவத்தை கண்டறிந்துள்ளனர். இதனுடன் தொடர்புபட்ட சந்தேகநபர்கள் நான்கு பேரையும் பொலீசார் கைது செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
Average Rating