தங்கை முறையான சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய பூசகர் கைது
Read Time:1 Minute, 9 Second
யாழ். சாவகச்சேரி பிரதேசத்தில் சிறுமியொருவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தில் கோவில் பூசகர் ஒருவரை இன்று கைது செய்துள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டுவில் கோவில் ஒன்றில் பூசகராக இருக்கும் 27 வயதுடைய இளம் பூசகரே, தனது தங்கை முறையான 16 வயதுடைய சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். குறித்த சிறுமியை கோவில் பின்வளவில் வைத்து வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். குறித்த பூசகர் கைது செய்யப்பட்டதுடன், இவரிடம் தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ்.சாவகச்சேரி பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
Average Rating