கொழும்பில் கணிதபாட ஆசிரியர் மாணவிமீது வல்லுறவு
கொழும்பு களுபோவிலயை அண்மித்த கொ{ஹவல பிரதேசத்தில் 14வயது பாடசாலை சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய கணிதபாட ஆசிரியரைக் நேற்று முன்தினம் கைதுசெய்ததாக கொ{ஹவல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் சிறுமியின் வீட்டுக்கு கணிதபாடம் கற்பிக்க சென்றிருந்த சந்தர்ப்பத்தில் இந்த சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தியதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தினத்தன்று இந்த சிறுமிக்கு சந்தேகநபர் கணிதபாடம் கற்பிக்க வந்தபோது அவசர தேவைக்காக சிறுமியின் தாயார் வீட்டைவிட்டு வெளிN சென்றுள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரை எதிர்வரும் 10ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொட மஜிஸ்திரேட் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
Average Rating