பொலன்னறுவை கைக்குண்டு வெடிப்பில் நான்குபேர் காயம்
Read Time:55 Second
பொலன்னறுவை கதுருவெல பிரதேசத்தில் நேற்றையதினம் மாலை கைக்குண்டு ஒன்று வெடித்ததில் நான்குபேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கதுருவெல பிரதேச வீடொன்றில் இந்த கைக்குண்டு வெடித்துள்ளது. வெடிப்பில் இரு பெண்களும் இரு ஆண்களும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிறு காயங்களுக்கு உள்ளான இருவர் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைக்குண்டு வெடிப்பு குறித்து பொலன்னறுவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating