பிள்ளையார் ஆலயத்தை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த பஸ்
Read Time:1 Minute, 21 Second
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் குருக்கள் மடத்தில் பிரதான வீதியில் அமைந்திருந்த பிள்ளையார் ஆலயத்தை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த இலங்கை போக்குவரத்து டிப்போவுக்குச் சொந்தமான பஸ்ஸினால், பஸ்ஸிலிருந்த இருவர் காயமடைந்துள்ளனர். அது மட்டுமன்றி கோவிலுக்கு பல இலட்சம் ரூபா சேதம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றிருப்பதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு டிப்போவிற்குச் சொந்தமான இந்த பஸ் வண்டி கல்முனையை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது பாதையைவிட்டு விலகி கோவில் மதிலை உடைத்துக் கொண்டு புகுந்துள்ளது. இதனால் பிள்ளையார் சிலை, கோவில் மதில், கோவில் கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன. இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating