மனைவியின் ஆசை நாயகனை கொல செய்தவர் விடுதலை
Read Time:59 Second
தனது மனைவியின் ஆசை நாயகனை 2009 ஜனவரி 22ம் திகதி கொலை செய்தாரென குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேகநபரை கொழும்பு மேல்நீதிமன்றம் நேற்று விடுதலை செய்துள்ளது. கொழும்பு கிருலப்பனையை சேர்ந்த லியனகே குணரத்ன என்பவர் அதேயிடத்தை சேர்ந்த சுனில் டி சில்வா என்பவரை 2009 ஜனவரி 22ஆம் திகதி கொலை செய்தாரென குற்றஞ்சாட்டி வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. சாட்சியங்களில் முரண்பாடுகள் காணப்படுவதாக வழக்கை தள்ளுபடி செய்த நீதவான் கூறியுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவரின் மனைவியுடன் இறந்து போனவர் கள்ளத் தொடர்பு கொண்டிருந்தார் என விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டது.
Average Rating