ராகுல் ட்ராவிட்டுக்கு அந்நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது
Read Time:1 Minute, 9 Second
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் இந்தியாவின் பெருஞ்சுவர் என அழைக்கப்படும் ராகுல் ட்ராவிட்டுக்கு அந்நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு துறைகளிலும் சாதித்த இந்தியர்களுக்கு ஆண்டுக்கொரு முறை வழங்கப்படும். இம்முறை இவ்விருதுகளை அந்நாட்டின் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்.
இதில் விளையாட்டுத் துறையில் சிறப்பாக செயல்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிட்டுக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.
இவரைத் தவிர, இங்கிலாந்தில் நடைபெற்ற ஒலிம்பிக் குத்துசண்டையில் வெண்கலம் வென்ற இந்தியாவின் மேரி கோமுக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.
Average Rating