விபசாரத்தில் ஈடுபட்ட 3 பெண்களுக்கு விளக்கமறியல் ஆண்களுக்கு பிணை

Read Time:2 Minute, 5 Second

prouமட்டக்களப்பிலுள்ள ஹோட்டல் ஒன்றில் விபசாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட பெண்கள் மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஹோட்டல் உதவியாளர் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இவர்களை மட்டக்களப்பு பொலிஸார் மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே பெண்கள் மூவரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த ஹோட்டலை பொலிஸார் முற்றுகையிட்ட போது மூன்று இனங்களையும் சேர்ந்த மூன்று பெண்களும் இராணுவத்தில் முக்கிய பதவி வகிக்கும் இரண்டு அதிகாரிகளும் முஸ்லிம் இளைஞர் ஒருவரும் ஹோட்டல் உரிமையார் மற்றும் உதவியாளரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

விபசாரத்தில் ஈடுபட்ட பெண்களுடன் இருந்த இராணுவத்தினரும் முஸ்லிம் இளைஞரும் பொலிஸில் பிணையில் நேற்று மாலையே விடுவிக்கப்பட்டதுடன் ஏனைய சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் வினோபா இந்திரா முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்நிலையிலேயே குறித்த மூன்று பெண்களையும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் உதவியாளரை பிணையில் செல்ல நீதவான் அனுமதித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ்ப்பாணத்தில் சிறுமியை கடத்த முற்பட்டவர் கைது
Next post சுவிஸ் பிரஜை ரயிலிலிருந்து தவறிவிழுந்து காயம்