நிட்டம்புவ பொலிஸ் பொறுப்பதிகாரியை கைது செய்ய நடவடிக்கை
Read Time:1 Minute, 14 Second
நபர் ஒருவரை கடத்திய சம்பவத்துடன் கம்பஹா, நிட்டம்புவ பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை சிலாபம் பொலிஸார் எடுத்துள்ளனர். கடந்த 3ம் திகதி மாலை, காரில் வந்த மூவர் என்னுடைய வீட்டில் இருந்த என்னை பலவந்தமாக அழைத்துச் சென்றனர். பின்னர் வெற்றுக் காகிதத்தில் கையொப்பம் பெற்றுக் கொண்டு மீண்டும் என்னை மைதானத்தருகே வீசிச் சென்றனர். இவர்களில் மூவரை அடையாளங் காட்ட முடியும். கார் இலக்கங்கள் தெரியும் எனஅந்நபர் என பாதிக்கப்பட்ட நபர் பொலீசில் தெரிவித்துளு;ளார். சிலாபம் பொலிஸார இதுபற்றி விசாரணை செய்ததில் நீர்கொழும்பைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர். இதன் பின்னர் நிட்டம்புவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Average Rating