மட்டக்களப்பு இளைஞன் லண்டனில் தூக்கிட்டு தற்கொலை
Read Time:57 Second
மட்டக்களப்பு, கல்லடி, வேலூரைச் சேர்ந்த இராசையா தயாளன் என்பவர் லண்டனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் கடந்த 2ஆம் திகதியன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தார் தெரிவித்தனர். இது தொடர்பில் லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் ஊடாக அவருடைய குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் குடும்பத்தினரும் உறுதி செய்துள்ளனர். ஒரு மகனின் தந்தையாகிய இவர் லண்டன் குடியுரிமை பெற்றவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவரது மரணத்திற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை எனவும் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
Average Rating