இந்தியாவிலிருந்து ஆஸி செல்ல முயன்றவர்களுக்கு விளக்கமறியல்
Read Time:1 Minute, 10 Second
இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச்செல்ல முயன்ற இலங்கை அகதிகளை 10ம் திகதிவரை காவலில் வைக்கும்படி தமிழகம் நாகபட்டிணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் தென்காசி பகுதியின் பல்வேறு அகதிகள் முகாம்களை சேர்ந்த 21 பெண்கள், 20 குழந்தைகள் உள்பட 120 பேர் கடந்த 5ஆம் திகதி வேளாங்கண்ணி அருகே உள்ள கிராமத்தில் இருந்து விசைப்படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் சென்றுகொண்டிருந்தனர். அப்போது நடுக்கடலில் படகு திடீரென பழுதாகி நின்றது. இதனால் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 120 பேரையும், இந்திய கடற்படையினர் மீட்டு, புதுச்சேரி மாநிலம் காரைக்கால் துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர். இவர்களே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Average Rating