பொலிஸாருக்கு பயந்து மாடியிலிருந்து குதித்த கள்ளக் காதலர்கள்
இந்தியாவில், ஊரைவிட்டு ஓடிவந்து கன்னியாகுமரியில் குடித்தனம் நடத்திய கள்ளக்காதல் ஜோடி, பொலிஸார் தங்களைப் பிடிக்க வந்ததால் பயந்துபோய் மொட்டை மாடியிலிருந்து கீழே குதித்துள்ளனர். இதன்போது கள்ளக் காதலியின் கால் எலும்பு முறிந்து போனது.
விழுப்புரம் மாவட்டம் கைபானிகுப்பம் பகுதியை சேந்தவ இரு பிள்ளைகளின் தாயான 25வயதுடைய சந்திரா, காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூர் கட்டப்பாக்கம் பகுதியை சேர்ந்த 25வயதான ராஜேஷ் என்ற வாலிபருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டநிலையில் குடும்பத்தைக் கைவிட்டு ராNஜுடன் ஓடிவிட்டார்.
சந்திராவின் கணவர் இவர்கள் வாடகைக்கு தங்கியுள்ள வீட்டிற்கு பொலீஸ் உதவியுடன் வந்தநிலையில் இதைப் பார்த்துப் பயந்து போன சந்திராவும், ராNஜும், அங்கிருந்து தப்பிச் செல்ல தீர்மானித்து மொட்டை மாடியிலிருந்து குதித்தனர்.
இதில் சந்திராவின் கால் முறிந்து எலும்பு உடைந்து போனது. ராஜேஷ் லேசான காயமடைந்தார். சந்திராவை தற்போது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
Average Rating