11 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவு
Read Time:1 Minute, 4 Second
போதி பூஜைக்கு பூப்பறிக்கச் சென்ற 11 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியமை தொடர்பாக தொடரப்பட்டிருந்த வழக்கில் எதிராளிக்கு 47 வருட கடூழியச் சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏழரை இலட்சம் ரூபா நஷ்ட ஈடும் வழங்கும்படி களுத்துறை மேல் நீதிமன்ற நீதியரசர் சமல் திலகரட்ண உத்தரவிட்டார்.
2001 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13 ஆம் திகதி ஆண்டு ஐந்தில் கல்வி பயின்ற 11 வயது மாணவியை வல்லுறவுக்குப்படுத்தியதாக சட்ட மா அதிபரால் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
களுத்துறையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான குமாரகே பிரேமசிரி என்ற நபருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டது.
Average Rating