மர்மமாக புதைக்கப்பட்ட சிசுவின் சடலம் மீட்பு
Read Time:1 Minute, 24 Second
யாழ்ப்பாணம் புத்தூர் மேற்கில் உயிரிழந்த 7 மாதக் குழந்தையின் சடலம் உரிய விசாரணைகளுக்கு உட்படுத்தப்ப டாமல் மயானத்தில் புதைக் கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த அச்சுவேலிப் பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணைகளை நடத்தி வருகின்றனர். புத்தூர் மேற்கைச் சேர்ந்த அன்ரன் ஜெனித்தாஸ் தனுஷன் (வயது 07 மாதம்) என்ற குழந்தையின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.
குழந்தையின் தாய் கணவரைப் பிரிந்து மிக வறுமையான நிலையில் வாழ்ந்து வருகின்றார். இதன்போது குழந்தைக்கு வயிற்றோட்டம் ஏற்பட்டுள்ளது. எனினும் குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சை வழங்காமல் ஆலயத்துக்கு நேர்த்தி வைத் துவிட்டு தாயார் இருந்ததால் குழந்தை உயிரிழக்க நேரிட்டது.
இதன்பின் சடலத்தை உரிய விசாரணைக்கு உள்ளாகாமல் புகிந்திட்டி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது என பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating