அரசுக்கு எதிராக முல்லையில் மக்கள் ஆர்ப்பாட்டம்

Read Time:1 Minute, 42 Second

tna.sivasaktiநில அபகரிப்பு, கடல் ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட சிங்களக்குடியேற்றம் என்பவற்றைக் கண்டித்து முல்லைத்தீவில் அரசுக்கு எதிராக கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட சமூக அமைப்புக்களும் பாதிக்கப்பட்ட மக்களும் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

மக்களின் இந்த உரிமைப் போராட்டத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது முழு ஆதரவையும் வழங்கியுள்ளது. முல்லைத்தீவு பிரஜைகள் குழுவின் தலைமையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

போராட்டத்தில் கொக்கிளாய் பங்குத் தந்தை,தமி்ழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வினோநோகராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கல நாதன், புளொட் முக்கியஸ்தர் சிவனேசந் பவன், தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

போராட்டத்தை குழப்பும் வகையில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இராணுவப் புலனாய்வாளர்களும் குவிக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இன்றைய ராசிபலன்கள்: 10.04.2013
Next post கங்ணம் ஸ்டைல் பாடல் மூலம் உலகை கலக்கிய தென்­கொ­ரிய பாட­க­ரான ஷை, தனது புதிய பாட­லொன்றை வெளி­யி­ட­வுள்ளார்