பாடகர் மாணிக்க விநாயகத்தின் இலங்கை விஜயம் இரத்து
வவுனியாவில் இடம்பெறவுள்ள இசைக் கச்சேரிக்கான விஜயத்தை சினிமா பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் உள்ளிட்ட தமிழக கலைஞர்கள் 25 ரத்து செய்துள்ளனர். வவுனியாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் இசை கச்சேரி நடத்த சினிமா பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் உள்ளிட்ட 25 பேர் இலங்கை வரவிருந்தனர்.
இதற்கு பெரியார் திராவிடர் கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். திருவான்மியூர் சாஸ்திரி நகரில் உள்ள மாணிக்க விநாயகம் வீட்டை முற்றுகையிட்டு போராட்டமும் நடத்தினர். பாடகர்கள் இலங்கை செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் போட்டார்கள். மாணிக்க விநாயகத்திடம் இலங்கை செல்ல வேண்டாம் என வற்புறுத்தி மனுவும் கொடுத்தார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் கைது செய்தனர்.
இதையடுத்து மாணிக்க விநாயகம் வெளியிட்ட அறிக்கையில், தமிழ் உணர்வாளர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து 11ஆம் திகதி (நாளை) இலங்கை வவுனியாவில் உள்ள கோவிலில் கும்பாபிஷேக விழாவினையொட்டி நடைபெற இருந்த இசை நிகழ்ச்சிக்கு நானும், மற்றவர்களும் யாரும் செல்லவில்லை என்பதையும், எங்கள் பயணத்தை ரத்து செய்துவிட்டோம் என்பதையும் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.
Average Rating