இந்திய வீடமைப்பு திட்டம் கண்காணிப்பு
Read Time:1 Minute, 21 Second
யாழ் விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்றைய தினம் அங்கு இடம்பெறுகின்ற இந்திய வேலைத்திட்டங்களை கண்காணித்துள்ளது. இந்தியாவின் அனுசரணையில் இடம்பெறுகின்ற், பலாலி வானூர்தி ஓடுபாதை புனரமைப்பு, யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் இந்திய வீட்டுத்திட்டம், குருநகரில் அமைந்துள்ள இந்திய இலங்கை நட்புறவு வலைத் தொழிற்சாலை போன்றவற்றை இந்த குழு கண்காணித்துள்ளது.
அத்துடன் யாழ் நூலகத்துக்கும் விஜயம் செய்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் இந்திய துணை உயர் ஸ்தானிகர் வே. மகாலிங்கம் இதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தார். இவர்களின் விஜயத்தின்போது மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமை நாயகம், மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா ஆகியோருடன், வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் உடனிருந்துள்ளனர்.
Average Rating