19 வயது யுவதியை கடத்திய சந்தேக நபர் கைது
Read Time:1 Minute, 19 Second
19 வயது யுவதியை கடத்திச் சென்ற மூவரில் ஒருவரை கைது செய்துள்ளதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.ஜெவ்ரி தெரிவித்தார்.
கடந்த 8 ஆம் திகதி தெல்லிப்பளை பகுதியில் வைத்து குறித்த யுவதியை 3 இளைஞர்கள் கடத்திச் சென்றுள்ளனர். கடத்தல் சம்பந்தமாக பெற்றோரினால் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. என்று அவர் சொன்னார். யாழ். பொலிஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இம்முறைப்பாட்டின் பிரகாரம், அதே இடத்தினைச் சேர்ந்த ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைதுசெய்யப்படாத இரு சந்தேக நபர்கள் தொடர்பாக புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேலும் கூறினார்.
Average Rating