புதுவருட சவாரி சென்று படகு கவிழ்ந்து தந்தையும் மகனும் பலி
Read Time:50 Second
இப்பாகமுவ – பத்தலகொட வாவியில் படகு செலுத்திச் சென்ற தந்தை மற்றும் மகன் படகு கவிழ்ந்து உயிரிழந்துள்ளனர்.
இன்று பகல் இந்த படகு விபத்து இடம்பெற்றுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
படகில் சென்று கொண்டிருந்த வேளை 4 வயது மகன் வாவியில் தவறி விழுந்ததை அடுத்து தந்தை மகனை காப்பாற்ற வாவியில் குதித்துள்ளார்.
பின்னர் இருவரும் நீரில் மூழ்கி உயிரிந்துள்ளனர்.
சடலங்கள் மீட்கப்பட்டு குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
உயிரிந்த தந்தைக்கு வயது 34.
Average Rating