மட்டக்களப்பு இரட்டை படுகொலை: 4 பேர் கைது
Read Time:59 Second
மட்டக்களப்பு, செங்கலடியில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலைகள் தொடர்பாக அவருடைய மகள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இரட்டைக்கொலைகள் தொடர்பில்; விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட புலனாய்வாளர்கள் கொழும்பிலிருந்து வரவழைக்கப்படடிருந்தனர்;. அவர்களே இந்த 4 பேரையும் கைது செய்துள்ளனர்.
ஏப்ரல் 8 ஆம் திகதி செங்கலடிச் சந்தி பதுளை வீதியிலுள்ள வீடொன்றில் வர்த்தகரும்; அவரது மனைவியும் இனந்தெரியாத நபர்களினால் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் நால்வரும் மாணவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
Average Rating