ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட முதியவர் மரணம்
Read Time:48 Second
முதியோர்களுக்கான ஓட்டப் போட்டியில் கலந்துகொண்ட 70 வயது நபர் உயிரிழந்துள்ளார். உள்ளூராட்சி மன்றமொன்றின் ஏற்பாட்டில் புதுவருடத்தினை முன்னிட்டு ரம்புக்கன பிரதேசத்தில் ஒட்டப் போட்டி நிகழ்ச்சி இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
இதில் முதியோர் பிரிவில் ஒடியவரே உயிரிழந்துள்ளார். இவர் சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூரம் ஓடிய நிலையில் கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.
Average Rating