யாழில் குடும்பஸ்தர் மாயம்

Read Time:1 Minute, 57 Second

Missing_5குடும்பஸ்தர் ஒருவரை காணவில்லை என பொலிஸிலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்திலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இளவாலை வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் ஜெசிந்தன் (வயது 27) என்பவரே காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என மனித உரிமைகள் ஆணைக்குழுவின்; யாழ். பிராந்திய அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

மேற்படி நபர் காணாமல் போனமை தொடர்பில் இளவாலை பொலிஸ் நிலையத்தில் ஏற்கெனவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய காரியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை தான் முறைப்பாடு செய்துள்ளதாக இவரது மனைவி தெரிவித்தார்.

கடந்த 4ஆம் திகதி நண்பர் ஒருவரின் கடவுச்சீட்டு புத்தகத்தை பெற்றுக்கொள்வதற்காக மானிப்பாய் பகுதிக்கு செல்வதாகக் கூறி காலை 7.30 மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்டவர் மாலை வரையும் வீட்டிற்கு திரும்பவில்லை.

இதனைத் தொடர்ந்து உறவினர்களின் வீடுகளில்; தனது கணவரை தேடிப் பார்த்தபோது அவர் உறவினர்களின் வீடுகளுக்கும் செல்லவில்லை என தெரியவந்ததைத் தொடர்ந்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் ஏற்கெனவே முறைப்பாடு செய்ததாக அவரது மனைவி மேலும் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரயில் இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வெளியில் வீசபட்டார்!
Next post காணாமல் போன சிறுமிகளில் எழுவர் கைது