காணாமல் போன சிறுமிகளில் எழுவர் கைது
யாழ். கைதடி பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்திலிருந்து காணாமல் போன சிறுமிகளில் கைது செய்யப்பட்ட ஏழு சிறுமிகளும் வைத்திய பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் செ. ஸ்ரீபவானந்தராஜா இன்று தெரிவித்தார்.
குறித்த சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த 16 சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டின் பிரகாரம் சிறுமி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சிறுமியின் உதவியுடன் ஏனைய சிறுமிகள் கைது செய்யப்பட்டு நேற்று இரவு சாவகச்சேரி பொலிஸாரினால் யாழ். போதனா வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விடயம் சம்பந்தமாக யாழ். போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியிடம் வினவிய போது,
‘பல்வேறு பொலிஸ் நிலையங்களிலும் இருந்து சிறுமிகள் அனுமதிக்கப்படவுள்ளதாகவும் தற்போது ஏழு சிறுமிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சில சிறுமிகள் தாங்களாகவே வைத்தியசாலையில் வந்திருப்பதாகவும் குறித்த சிறுமிகளிடம் வைத்திய பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை என்றும் இன்று மாலைக்குள் சிறுமிகள் மீதான வைத்திய பரிசோதனை மேற்கொள்ளவுள்ளது’ என்றார்.
Average Rating