சிங்கள, தமிழ் புத்தாண்டுக் காலத்தில் விபத்து, மோதல்களினால் 21 பேர் பலி

Read Time:1 Minute, 20 Second

Yellow reminder with pin on notice boardசிங்கள, தமிழ் புத்தாண்டுக் காலத்தில் இடம்பெற்ற வீதி விபத்துக்களின்போது 13 பேரும் மோதல்களின்போது 8 பேரும் மரணமடைந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மேலும், மதுபோதையில் வாகனம் செலுத்திய 550 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த மாதம் 13ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதிவரை இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு, இரத்தினபுரி, தங்காலை, மாத்தறை, குருநாகல், கண்டி, அநுராதபுரம் ஆகிய இடங்களிலேயே இவ்வாறான சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இதேவேளை, புத்தாண்டுடன் தொடர்புடைய பல்வேறு விபத்துக்கள் காரணமாக 260 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் 230 பேர் களுபோவில போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காணாமல் போன சிறுமிகளில் எழுவர் கைது
Next post லொறிக்குள் நசுங்குண்டு நான்கரை வயது சிறுமி பலி