அரசாங்கத்தின் மூன்று இணையங்கள் முடக்கம்
Read Time:1 Minute, 1 Second
இலங்கை அரசின் மூன்று இணையத்தளங்கள்மீது மீண்டும் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தம்மை பங்களாதேஸ் கிறே ஹட் ஹக்கேர்ஸ் என அறிமுகம் செய்துள்ளவர்களே இத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இத்தாக்குதலால், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு இணையத்தளம், பாராளுமன்ற சபை முதல்வரின் இணையத்தளம், தேசத்திற்கு மகுடம் கண்காட்சி இணையத்தளம் என்பன முடக்கப்பட்டுள்ளன.
இஸ்லாம் மதத்தை அவமதிக்கப்படுவதற்கு எதிராகவே இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக, சைபர் தாக்குதலை நடத்தியவர்கள் அறிவித்துள்ளனர்.
எனினும் சைபர் தாக்குதலுக்கு இலக்கான மூன்று இணையத்தளங்களும் மீள இயங்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்து.
Average Rating