மடுப் பிரதேசத்தில் மச்சான்மார் மோதலில் இருவரும் உயிரிழப்பு

Read Time:1 Minute, 52 Second

mannar.Map.Arippuமன்னார் பெரிய பண்டிவிருச்சான் கிராமத்தில் மச்சான் முறையான இருவருக்கிடையில் நேற்றுமாலை ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையாக மாறிய நிலையில் ஒருவர் பலத்த காயத்துடன் உயிரிழந்த நிலையில் மற்றையவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மடு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெரிய பண்டிவிருச்சான் கிராமத்தைச் சேர்ந்த 52வயதான ஜோசப் பிரான்சிஸ் மற்றும் அவருடைய மச்சான் 35வயதுடைய ஜூட் சகாயதாசன் ஆகிய இருவரும் பணங்கள்ளு குடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த நிலையில் இருவருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜோசப் பிரான்சிஸ் தனது வீட்டிற்கு மாலை 3 மணியளவில் சென்றுள்ளார். இவருடன் சென்ற ஜூட் சகாயதாசன் என்பவர் அவருடன் சண்டையிட்டதோடு மண்வெட்டியை எடுத்து ஜோசப் பிரான்சிஸ் என்பவர் மீது தாக்கியதோடு அவர் கிழே விழுந்தவுடன் கழுத்தில் மண்வெட்டியினால் வெட்டியுள்ளார்.

இதன் போது ஜோசப் பிரான்சிஸ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மச்சானரான ஜுட் சகாய தாசன் என்பவர் அருகில் உள்ள காட்டுக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கையர்களுக்கு ஆபத்தில்லை
Next post பாஸ்டன் குண்டுவெடிப்பில் இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை