மாணவியை துஷ்பிரயோகம் செய்து கப்பம் கோரிய ஆசிரியர் கைது
மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி அதனை வீடியோ பதிவூசெய்ததுடன்இ அந்த வீடியோவை அம்பலப்படுத்தாமல் இருப்பதற்காக மாணவியிடம் கப்பம் கோரிய பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் ஒருவர் கம்பஹாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுவிடயமாக கைதான பிரத்தியேக வகுப்பு ஆசிரியரை எதிர்வரும் 05ம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
கம்பஹாவில் பிரபல மகளிர் வித்தியாலயத்தில் 13ம் வகுப்பில் கல்விபயிலும் மாணவியூடன் குறித்த பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் காதல் கொண்டிருந்ததுடன் மாணவியை ஏமாற்றி துஷ்பிரயோகம் செய்து வீடியோவூம் எடுத்துள்ளார்.
அந்த வீடியோவை இணையத்தளங்களின் ஊடாக அம்பலப்படுத்துவதாக மாணவியை அச்சுறுத்தியூள்ளார். அதனை தடுக்க வேண்டுமாயின் தனக்கு 5 இலட்சம் ரூபாவை கப்பமாக தருமாறும் மாணவியை அச்சுறுத்தியூள்ளார்.
இதையறிந்த பாடசாலை அதிபர் பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்தே பிரத்தியேக வகுப்பின் ஆசிரியர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Average Rating