நீர்கொழும்பில் விபச்சார மையங்கள் சுற்றிவளைப்பு, ஐவர் கைது
Read Time:1 Minute, 6 Second
நீர்கொழும்பு நகர மத்தியில் இயங்கி வந்த இரு விபசார நிலையங்களை சுற்றிவளைத்த நீர்கொழும்பு பொலீசார் மூன்று பெண்கள் உட்பட ஐவரை நேற்று கைது செய்துள்ளனர். கைதானோரில் இருவர் விபசார நிலையங்களின் முகாமையாளர்களாவர்.
நீர்கொழும்பு ருக்மணிதேவி மாவத்தையிலேயே இந்த விபசார நிலையங்கள் மிகவூம் இரகசியமாக இயங்கி வந்துள்ளது.
வாடிக்கையாளர்களை போல சிவில் உடையில சென்ற பொலிஸார் இருவரே இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
கைதானவர்கள் நீர்கொழும்பு பதில் நீதவான் சுவர்ணா பெரேரா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது ஐவரையூம் எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Average Rating