த.ம.வி.பு உறுப்பினரின் வீட்டின் மீது தாக்குதல்
மட்டக்களப்பு ஆரையம்பதி இராசதுரை கிராமம் 3ல் உள்ள முன்னாள் த.ம.வி.பு கட்சி உறுப்பினர் கோணமலை கண்ணதாசனின் வீடு நேற்றிரவு ஆயுததாரிகளினால் தாக்கப்பட்டு அங்குள்ள உடைமைகளுக்கும் பொருட்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முன்னாள் த.ம.வி.பு கட்சி உறுப்பினரும் வீட்டு உரிமையாளருமான கோணமலை கண்ணதாசன் கருத்து தெரிவிக்கையில், நேற்று இரவூ 8மணியளவில் நான் வீட்டில் இல்லாதபோது சிலர் இந்த நாசகார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கான முழுப்பொறுப்பும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரசாந்தனும், த.ம.வி.பு கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சி.சந்திரகாந்தனுமே கூற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை கண்ணதாசனின் பிள்ளைகளை தாக்கியதுடன் அவர்களில் இருவரின் தலையில் பலமாக அடிக்கப்பட்டு தற்போது ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே இவர்கள் பலமுறை தமக்கு இப்படியான நாசகார நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் சம்பவம் தொடர்பில் பொலிஸாரும் இரானுவத்தினரும் ஸ்தலத்திற்கு வந்து விசாரித்ததாகவூம் கண்ணதாசனின் மனைவி தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்குள்ளான வகுசனா(வயது13)இ ரதுசன் (வயது04)இ ஆகிய தனது இரு பிள்ளைகளும் ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியூள்ளார்.
Average Rating