வாகரையில் புகலிடக் கோரிக்கையாளர்கள் கைது
Read Time:40 Second
மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பிரதேசத்தில் 61 புகலிடக் கோரிக்கையாளர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். பலநாள் படகு ஒன்றின் மூலம் குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் தப்பிச் செல்ல முற்பட்டுள்ளனர்.
மதுஷான் 2 என்ற படகே இவ்வாறு கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்தப் படகில் எட்டு பெண்களும், பத்து சிறுவர்களும் பயணித்துள்ளனர். சந்தேக நபர்களிடம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Average Rating