தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் விசாரணை
Read Time:1 Minute, 10 Second
தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரனிடம் 04ம் மாடியில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினர் 2மணிநேரம் இன்று விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணைக்காக நான்காம் மாடிக்கு வருமாறு கடந்த 12ம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவினரால் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த அழைப்பு உரிய காலத்தில் கிடைக்காமையினால் அன்று அவரால் 4ஆம் மாடிக்கு செல்லமுடியவில்லை. இந்நிலையிலேயே இன்றுகாலை 10 மணிமுதல் 12 வரை விசாரணை அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இராணுவமயமாக்கல் என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட கருத்து தொடர்பாகவே விசாரணை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
Average Rating