பொஸ்டனில் குண்டுவெடித்தவர்களில் ஒருவர் மடக்கிப் பிடிப்பு
Read Time:1 Minute, 0 Second
அமெரிக்காவில் பொஸ்டன் மரதன் போட்டியின்போது குண்டு வைத்ததாக சந்தேகிக்கப்படும் இருவரில் ஒருவரான ஸோகார் சர்னயேவ் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர் பதுங்கியிருந்த கட்டிடத்தை அமெரிக்க பொலிஸார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் செச்சன்ய இனத்தைச் சேர்ந்தவர். இவர் ஆயுதம் வைத்திருக்கலாம் என்றும், அப்பகுதியில் வாழ்பவர்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்றும் பொலிஸார் எச்சரித்திருந்தனர்.
சந்தேகநபர்களில் மற்றவர் பொலிஸாருடன் நடந்த துப்பாக்கி மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Average Rating