சட்டவிரோத மின்கம்பியில் சிக்கி எருமைகள் உயிரிழப்பு
Read Time:55 Second
காட்டுப் பன்றிகளை பிடிக்க வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின் கம்பியில் சிக்கி எருமைகள் 3 உயிரிழந்துள்ளன. கண்டி கட்டுகஸ்தோட்டை, ஹலோழுவ பிரசே வயல்வெளியில் ஒருவர் பாதுகாப்பற்ற முறையில் இம்மின்கம்பியை இணைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மின்கம்பியில் சிக்கி இறந்துள்ள 3 எருமைகளும் 200,000 ரூபாவுக்கு மேல் பெறுமதியானதெனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
தலைமறைவாகியுள்ள சந்தேகநபரை கைதுசெய்வதற்கான விசாரணையை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Average Rating