பஸ் ஆட்டோ மோதி விபத்து, இருவர் பலி
Read Time:54 Second
பஸ்சும் ஆட்டோவும் இன்றுமாலை மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். வவுனியாவிலிருந்து கண்டிக்கு சென்று கொண்டிருந்த பஸ் மற்றும் மத்தளையிலிருந்து கவுடுபெலெல நோக்கி பயணித்த ஆட்டோவும் மோதுண்டதிலேயே விபத்து நேர்ந்துள்ளது. இதன்போது ஆட்டோவில் பயணித்த இருவரே உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை படுகாயமடைந்த ஆட்டோ சாரதி மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர்கள் 30 மற்றும் 32 வயதை உடையவர்கள் எனவும் களுதாவளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
Average Rating