செங்கலடி இரட்டைப் படுகொலை சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

Read Time:1 Minute, 20 Second

batமட்டக்களப்பு, செங்கலடி கணவன் மனைவி ஆகிய இரட்டைப் படுகொலை சந்தேகநபர்களான 15முதல் 16வயதுகளையுடைய நான்கு மாணவர்களையும் மேலும் இரு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல வர்த்தகரான சிவகுரு ரகு மற்றும் அவரது மனைவி விப்ரா ரகு ஆகியோர் கடந்த ஏப்ரல் 8ம் திகதி வீட்டில் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர். விசாரணையின் போது மகளின் காதல் விவகாரமே இதற்கு காரணம் என தெரிய வந்தது.

இதனையடுத்து கொல்லப்பட்டவர்களின் மகள் மற்றும் அவளின் காதலன் உட்பட நான்கு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இவர்கள் இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிவான் ரீ.கருணாகரன் முன்னிலையில் மீண்டும் ஆஜர் செய்யப்பட்டனர். இவர்களை எதிர்வரும் மே 8ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பஸ் ஆட்டோ மோதி விபத்து, இருவர் பலி
Next post தற்கொலை செய்யத் துணிந்த மனிதனை காப்பாற்றும் திகிலான நொடிகள் (VIDEO)