சட்டவிரோத படகுமூலம் ஆஸி செல்ல முயன்றவர்கள் கைது
Read Time:1 Minute, 15 Second
சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 55 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மிதுனா புத்தா – 3 என்ற மீன்பிடி படகுமூலம் அவுஸ்திரேலியா சென்று கொண்டிருந்த இவர்கள் இன்றுஅதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.
நீர்கொழும்பு கிழக்கு கடற்பரப்பிலிருந்து 12 மைல் தூரத்தில் குறித்து படகு கடற்படையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் 6 பெண்களும் 8 சிறுவர்களும் அடங்குவர்.
இவர்கள் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா, புத்தளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் மோதரை மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.
Average Rating