புத்தளம் விபத்தில் பிரதேசசபைத் தலைவர் பலி

Read Time:1 Minute, 15 Second

accsi.Crash-Genericகொழும்பு புத்தளம் பிரதான வீதியின் தெதுருஓயா பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் புத்தளம் பிரதேசசபைத் தலைவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்து இன்றுஅதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து புத்தளம் சென்ற லொறி குறித்த திசையில் பயணித்த புத்தளம் பிரதேசசபை தலைவரின் கெப் வாகனம்மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த கெப் வாகனத்தின் சாரதி மற்றும் புத்தளம் பிரதேசசபைத் தலைவர் ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் புத்தளம் பிரதேச சபைத் தலைவர் ஆர்.பி.திலுக் பத்திரகே (40 வயது) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பயங்கரவாதிகளும் பிரிவினைவாதிகளும் தேர்தலில் போட்டியிட அனுமதி- முன்னாள் இராணுவத் தளபதி சரத்
Next post சுன்னாகத்தில் இரு பெண்களைக் காணாமற் போயுள்ளனர்