சுன்னாகத்தில் இரு பெண்களைக் காணாமற் போயுள்ளனர்
Read Time:1 Minute, 6 Second
சுன்னாகம் பொலிஸ் பகுதியில் இரு பெண்கள் காணாமல் போயுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
மல்லாகம் கோட்டைக்காட்டுப் பகுதியில் வசிக்கும் 16 வயது மாணவி ஒருவர் வீட்டில் ஏற்பட்ட முரண்பாட்டைத் தொடர்ந்து வீட்டிலிருந்து வெளிச் சென்றவர் திரும்பி வரவில்லையென முறையிடப்பட்டுள்ளது.
இதேவேளை சுன்னாகம் காங்கேசன்துறை வீதியைச் சேர்ந்த 26 வயது பெண் ஒருவர் தான் வீட்டில் இருந்து சுகயீனம் காரணமாக வெளியேறுவதாகக் கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றநிலையில் காணமால் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Average Rating