கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப்படம் வைத்திருந்த இளைஞருக்கு அபராதம்

Read Time:1 Minute, 48 Second

ANI.Sex.Girl.002யாழ் சுன்னாகம் பகுதியில் கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப்படம் வைத்திருந்த இளைஞருக்கு மல்லாகம் நீதிமன்றம் 3ஆயிரம் ரூபா தண்டம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப்படம் வைத்திருந்த குறித்த இளைஞர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சுன்னாகம் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்தே குறித்த இளைஞருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு 11.45 மணியளவில் சுன்னாகம் நகரப் பகுதிக்கு துவிச்சக்கர வண்டியில் வந்த ஒருவர் அவருடன் வந்தவரை இறக்கிவிட்டு அப் பகுதியில் பல தடவைகள் சுற்றியுள்ளார். இதனை அப்பகுதியில் ரோந்தில் ஈடுபட்ட பொலிசார் அவதானித்ததையடுத்து குறிப்பிட்ட நபரை மறித்து விசாரணை செய்தவேளையில், தான் சாவகச்சேரியைச் சோந்தவர் எனவும் சுன்னாகத்தில் இடம்பெறும் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வந்ததாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து சந்தேகம் கொண்ட பொலிசார் குறித்த நபருடைய கையடக்கத் தொலைபேசியை வாங்கி சோதனை செய்த வேளையில் அவருடைய கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப்படங்கள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீள்சுழற்சி செய்யப்படக் கூடிய பாதணி
Next post இன்றைய ராசிபலன்கள்: 26.04.2013