5 மில்லியன் ரூபா மோசடி வழக்கில் பவர் ஸ்டார் கைது
பவர் ஸ்டார் டொக்டர் சீனிவாசன் 5 மில்லியன் (இந்திய மதிப்பில்) ரூபா மோசடி வழக்கில் இன்றுகாலை சென்னை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து தெரிய வருவதாவது, இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ரங்கநாதன் என்பவரிடமிருந்து 20 கோடி ரூபா கடன் பெற்றுத் தருவதாகக் கூறி 5 மில்லியன் ரூபாவை தரகுப் பணமாக பெற்றுள்ளார் பவர் ஸ்டார்.
ஆனால் இதுவரையில் ரங்கநாதனுக்கு கடன் தொகையான 20 கோடி ரூபாவையோ அல்லது தரகுப் பணமாக பெற்ற 5 மில்லியன் ரூபாவையோ பவர் ஸ்டார் கொடுக்கவில்லை.
இதனையடுத்து பொலிஸில் முறைப்பாடு செய்ததோடு பவர் ஸ்டார் மீது வழக்கும் தொடர்ந்துந்துள்ளார் ரங்கநாதன்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை சென்னை, அண்ணா நகரிலுள்ள பவர் ஸ்டாரின் வீட்டில் வைத்து சென்னை குற்றத் தடுப்பு பொலிஸார் அவரைக் கைது செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு மோசடி வழக்கில் பவர் ஸ்டார் கைது செய்யப்பட்டமை அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating