பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தும் முடிவில் மாற்றமில்லை -ஷர்மா

Read Time:1 Minute, 35 Second

Commonwealth-of-Nations-Flagsபொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தும் முடிவில் மாற்றமில்லை என்று பொதுநலவாய அமைப்பின் செயலகம் அறிவித்துள்ளது.

லண்டனில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, பொதுநலவாய அமைப்பின் தலைமைச் செயலாளர் கமலேஷ் ஷர்மா இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளார்.

2013ம் ஆண்டு பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என்று பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகளும் கோரிக்கை விடுத் துவந்தனர். இந்நிலையிலேயே தமது முடிவில் மாற்றமில்லை என்று பொதுநலவாய அமைப்பின் செயலகம் அறிவித்துள்ளது.

பொதுநலவாய மாநாடு நடத்தப்படும் இடத்தை இலங்கையிலிருந்து மாற்றுமாறு வலியுறுத்தி லண்டனிலுள்ள புலம்பெயர் தமிழர்கள், பொதுநலவாய அமைப்பின் செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த அறிவிப்பும் விடுக்கப்பட்டுள்ளது.

பொதுநலவாய அமைப்பின் 23ஆவது மாநாடு, இலங்கையில் எதிர்வரும் நவம்பர் 15 திகதி முதல் 17ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நடைபெறவுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 5 மில்லியன் ரூபா மோசடி வழக்கில் பவர் ஸ்டார் கைது
Next post எதிரணி வீரரை கடித்த கால்பந்தாட்ட வீரருக்கு 10 போட்டிகளில் விளையாடத் தடை