13 வயது சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கறபழித்த கும்பல்

Read Time:2 Minute, 23 Second

imagesமும்பை புறநகர் பகுதியான சாந்தா குரூசைச் சேர்ந்தவர் மெல்வின் டிசோசா. இவர் மும்பையில் தனது காதலி வீட்டில் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தார். அந்த விருந்துக்கு தனது நண்பர்கள் சச்சின் யாதவ், பிபின்சிங், வெங்கட் நாயுடு ஆகியோரை அழைத்து இருந்தார்.காதலியின் தோழியான 13 வயது சிறுமியையும் காதலி மூலம் டிசோசா வரவழைத்தார். தோழி தானே என்று நம்பி அந்த சிறுமி வந்தாள். 4 பேர் இருப்பதைப் பார்த்து தயங்கினாள். என்றாலும் தோழி அவரை சமாதானப்படுத்தி சம்மதிக்க வைத்தாள். இதையடுத்து அனைவரும் குளிர்பானம் அருந்தினார்கள்.அப்போது 13 வயது சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தனர். அதை குடித்ததும் அவளுக்கு மயக்கம் ஏற்பட்டது. மயங்கிய நிலையில் சிறுமியை 4 பேரும் கற்பழித்தனர். மயக்கம் தெளிந்து எழுந்த சிறுமி வீடு திரும்பினாள்.வலியால் துடித்த அவளை தாயார் என்ன வென்று விசாரித்தபோது நடந்த சம்பவத்தை விவரித்தாள். இதையடுத்து சிறுமி உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து நடந்த சம்பவம் வெளியில் தெரிய வந்தது.போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கற்பழிப்பு மற்றும் சிறுமியை வன்கொடுமைக்கு ஆளாக்கியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. கற்பழிப்புக்கு உடந்தையாக இருந்த காதலியும் கைது செய்யப்பட்டாள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மேலாடையை இன்னும் கொஞ்சம் நகர்த்தியிருந்தால் முழுசா பாத்திருக்கலாம் (PHOTOS)
Next post தமிழ் சினிமாவை விடப்போதில்லை- ப்ரணிதா சபதம்