தமிழ் சினிமாவை விடப்போதில்லை- ப்ரணிதா சபதம்
தமிழில் சகுனி படத்தில் நடித்தவர் ப்ரணிதா. அதே படம் ஷக்குனி என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியானது. ஆனபோதும் ப்ரணிதாவுக்கு எந்த புதிய வாய்ப்புகளும் கிடைக்கவிலலை. அதனால் தனது தாய்மொழியான கன்னட சினிமாவுக்குள் அதிரடியாக பிரவேசித்தார்.தற்போது மிஸ்டர் 420 உள்பட 3 கன்னட படங்களில் நடித்து வருகிறாராம், அதோடு தெலுங்கில் பாவா என்ற பெயரில அவர் நடித்த படமும் சூப்பர் ஹிட்டாகியுள்ளதாம். அதனால் புதிய தெலுங்கு படங்கள் ப்ரணிதாவை தேடி சென்று கொண்டிருக்கிறதாம்.அதனால், கைவசமுள்ள கன்னட படங்களை முடித்ததும் தெலுங்கில் பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேரும் படங்களாக தேர்வு செய்து நடிப்பேன் என்று சொல்லும் ப்ரணிதா, தமிழையும் விடப்போதில்லையாம். சகுனி படத்துக்காக கோலிவுட்டுக்கு வந்தபோது, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வேண்டும் என்பதுதான் எனது டார்கெட்டாக இருந்தது.ஆனால், நான் நினைத்தது நடக்கவில்லை. இருப்பினும், இப்போது சில புதிய படங்களுக்காக பேசி வருகிறேன். கூடிய சீக்கிரமே நான் அந்த படங்களில் நடிப்பதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்கிறார் ப்ரணிதா.
Average Rating