தூத்துக்குடியில் நடக்கும் ‘சிங்கம் 2’ படப்பிடிப்பில் அஞ்சலி
Read Time:1 Minute, 17 Second
ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சிங்கம் 2’ படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அஞ்சலி கலந்து கொண்டார்.
ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா நடிக்கும் படம் ‘சிங்கம் 2’. இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இவரது இசையில் இப்படத்தில் ஒரு குத்துப்பாட்டு இடம் பெறுகிறது. இப்பாடலில் நடிகை அஞ்சலியை நடனம் ஆட வைக்க ஹரி முடிவு செய்திருந்தார். இதற்காக தூத்துக்குடி வந்து குத்துப்பாட்டுக்கு நடனமாடியிருக்கிறார் அஞ்சலி. சில நாட்களுக்கு முன் சித்தியுடன் ஏற்பட்ட பிரச்சினைக்கு பின் முதன் முறையாக தமிழகம் வந்து நடித்துள்ளார் அஞ்சலி.
இதற்கிடையே நேற்று அவரது சித்தி தொடர்ந்து ஹேபியர்ஸ் கார்பஸ் வழக்கில் அஞ்சலி உடனடியாக ஆஜராக வேண்டாம் என்று கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
Average Rating