பெங்களூருக்கு காரில் கடத்தி வந்த 500 கிலோ வெடிபொருள் சிக்கியது
கோலாரில் இருந்து பெங்களூக்கு கடத்தி வரப்பட்ட 500 கிலோ அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருளை தேர்தல் கண்காணிப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.இதற்கிடையே, பெங்களூர் மல்லேஸ்வரம் குண்டு வெடிப்பு சம்பவத்தால், அங்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கோலார்முல்பாகர் நெடுஞ்சாலையில் ஈடேஹல்லியில் நேற்று முன்தினம் இரவு போலீசார் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வந்த காரில் 20 கிலோ எடையுள்ள 25 அம்மோனியம் நைட்ரேட் வெடிமருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்த எடை 500 கிலோ. இது தொடர்பாக காரை ஓட்டி வந்த மெஹபூப் பிடிபட்டார்.அவரை கோலார் போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த வெடிபொருள் தென்கொரியாவில் தயார் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. பெங்களூர் மல்லேஸ்வரம் பா.ஜ அலுவலகம் அருகில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.இச்சம்பவத்தில் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருளாக பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மீண்டும் பெங்களூருக்கு அம்மோனியம் நைட்ரேட் கொண்டு வரப்பட்டதன் பின்னணி குறித்து விசாரணை நடந்து வருகிறது.
Average Rating