பணம் பறிக்க பெண்ணிடம் நூதன மிரட்டல் : கொலை செய்ததாக கூறப்பட்டவர் உயிருடன் வந்தார்
கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட வாலிபர் உயிருடன் திரும்பி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.சேலம் அம்மாப்பேட்டை சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் வசந்தராஜ் என்கிற கார்த்தி (21). கோவையில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் கலெக்ஷன் பிரிவில் வேலை பார்க்கிறார். இவரது நண்பர் உடையாப் பட்டி பெருமாள் கோயில் மேடு பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி என்கிற வடிவேல் (22). இருவரும் நேர்த்திகடன் செலுத்த கடந்த 25ம்தேதி திருச்செந்தூர் சென்றனர்.அங்கு இருவரும் கடலில் குளித்தனர்.அப்போது கரையில் வைத்திருந்த துணி மற்றும் செல்போன்களை காணவில்லை.இது குறித்து திருச்செந்தூர் போலீசில் புகார் செய்தனர்.
பின்னர் இருவரும் சேலம் புறப்பட்டனர்.இதனிடையே செல்போனை எடுத்த மர்ம கும்பல் நேற்று முன்தினம் மாலை கார்த்தியின் போனில் இருந்து அவரது தாய் அம்பிகாவை தொடர்பு கொண்டு, ‘2 பேரையும் கடத்தி சென்றுவிட்டோம். அவர்களில் ஒருவரை கொன்று விட்டோம். 50 ஆயிரத்தை தூத்துக்குடி பஸ் ஸ்டாண்டுக்கு கொண்டு வந்து கொடுத்துவிட்டு மற்றொருவரை மீட்டுச் செல்லுங்கள்Õ என மிரட்டினர். இதைக்கேட்ட அம்பிகா பதறினார். உடனே இது குறித்து அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். மர்ம கும்பல் மிரட்டிய பேச்சை ரெக்கார்டு செய்து அதை போலீசுக்கு போட்டுக்காட்டினார். கும்பல் பேசியதை கேட்டு போலீசாரும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தனிப்படை அமைக்கப்பட்டு அம்பிகாவை அழைத்துக் கொண்டு நேற்று அதிகாலை 3 மணிக்கு தூத்துக்குடிக்கு விரைந்தனர்இதனிடையே நண்பர்கள் 2 பேரும் நேற்று காலை சேலம் ஜங்ஷன் வந்தனர். சைக்கிள் ஸ்டேண்டில் நிறுத்தியிருந்த டூ வீலரை எடுக்கச் சென்றனர்.
அங்கிருந்த வாட்ச்மேன் இந்த டூ வீலரின் உரிமையாளர்களை மர்ம கும்பல் கடத்தி கொன்றுவிட்டதாகவும், யாராவது வண்டி எடுக்க வந்தால் போலீசுக்கு தெரியப்படுத்துமாறும் கூறியதாக கூறினார்.இதைக்கேட்ட நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே பதறியபடி வீட்டிற்கு சென்றனர். அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று நடந்த வற்றை தெரிவித்தனர். இந்த தகவலை போலீசார் தனிப்படைக்கு தெரிவித்தனர். இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கிருந்து சேலம் திரும்பினர். செல்போனை திருடி அதிலிருந்து மிரட்டி கலங்க வைத்த கும்பலை பிடிக்க து£த்துக்குடி போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Average Rating