இந்தியாவில் 15 வயது மாணவன் சக மாணவனால் சுட்டுக்கொலை!

Read Time:1 Minute, 36 Second

images9இந்தியாவின், அரியானா மாநிலம் ரோஹ்தக் மாவட்டத்தில் மேஹம் நகரில் கோவில் திருவிழா ஒன்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட 10ம் வகுப்பு மாணவன் நிதீன் (வயது 15), அவனது சக மாணவர்களால் சுட்டு கொல்லப்பட்டுள்ளான். மாணவர்களிடையே இரு குழுக்கள் இருந்ததாகவும், அவர்களிடையே ஏற்பட்ட பழைய பகை இந்த கொலையில் முடிந்துள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த சிறுவன் தனது நண்பனான அங்கூர் என்பவனை சம்பவத்தன்று 4 பேர் கொண்ட மாணவர்களிடம் இருந்து காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளான்.

இந்த விவகாரம் நடைபெற்று கொண்டிருந்தபோது, அவர்களில் ஒருவன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுள்ளான்.

இதில் காயமடைந்த நிதீன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். ஆனால் அவன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 4 பேரில் 3 குற்றவாளிகளை பொலிசார் கைது செய்துள்ளனர். தாக்குதலை கண்டித்து மாணவனின் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் சிறிது நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளம்பெண்ணுடன் கள்ளத்தொடர்பு பட்டறை ஊழியருக்கு வெட்டு: கணவன் கைது
Next post சமந்தாவுக்கு கேக் ஊட்டிவிட்ட சித்தார்த்!