வாய் தகராறு மோதலானது: மாணவன் பலி
அரியானா மாநிலம் ரோக்டக் மாவட்டத்தில், மேகம் நகரில், சக மாணவர்களுக்குள் ஏற்பட்ட வாய் சண்டையில், மாணவன் ஒருவன் கொல்லப்பட்டான். இதனால், ஆத்திரமடைந்த அம்மாணவனின் பெற்றோர் மற்றும் குடும்பத்தார், ஆத்திரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேகம் நகரில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு, நடந்த நிகழ்ச்சியில், ஒரே பள்ளியில் படிக்கும் ஐந்து மாணவர்கள் பங்கேற்றனர். அதில், மாணவர்கள், வாய் தகராறு ஏற்பட்டு மோதலில் முடிந்துள்ளது. இதில், நான்கு மாணவர்கள் சேர்ந்து, நிதின், 15, என்ற மாணவனை தாக்கியுள்ளனர்.
இதில், அம்மாணவன் பலியாகியுள்ளான். அம்மாணவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், மாணவன் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர்.
இதனால், கோபம் அடைந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், கொலை செய்தவர்களை கைது செய்யக் கோரி, தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கும் மேல் நடந்த மறியலால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து, கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்கிறோம் என, போலீசார் உறுதியளித்த பின்னரே, மறியலை கைவிட்டனர்.
Average Rating