வயசுப் பெண்களின் வலி என்ன ? திரு-புகழ் சொல்கிறது

Read Time:2 Minute, 3 Second

images (11)கொலிவுட்டில் ரியல் ஸ்கிரீன் என்ற புதிய படநிறுவனம் தயாரிக்கும் படம் திரு-புகழ்.

இப்படத்தில் திலீப்குமார், பிரபுராஜ் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள், கதாநாயகியாக திவ்யாசிங் நடிக்கிறார்.

இவர்களுடன் சீதா, நளினி, சுபலேகா, சுதாகர், சுதா, காதல் தண்டபாணி, ரியாஸ்கான், கஞ்சா கருப்பு, பாண்டு ஆகியோர் நடிக்கிறார்கள்.

இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் இயக்குனர் K.அர்ஜூன ராஜா.

இவர் ஏற்கனவே மையம் கொண்டேன், கோவலனின் காதலி என்ற படங்களை இயக்கி முடித்துள்ளார். அந்த படங்கள் விரைவில் வெளியாக உள்ளது.

படம் குறித்து இயக்குனர் K.அர்ஜூன ராஜா கூறுகையில், ஒரு பெண் வயதிற்கு வருவதற்கு முன்பு வரை பெற்றோர்களின் செல்லப் பிள்ளையாக இருப்பாள், வயது வந்த பின்பு அதே பெற்றோர்களுக்கு அவள் சிறை கைதி ஆகிறாள்.

வயசு வருவதற்கு முன்பு பட்டாம்பூச்சியாக சிறகடிக்க முடிந்த அவளால் அதன் பின்னர் அவ்வாறு இருக்க முடியாமல் போகிறது.

காதல் என்னும் பெயரில் அவளுக்கு ஏற்படும் தொல்லைகள் சொல்லி மாளாது என்றும் அதுதான் படத்தின் கதை எனவும் கூறியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டி, திண்டுக்கல், கொடைக்கானல் போன்ற இடங்களில் நடைபெற்றது.

தணிக்கைக் குழுவில் திருப்புகழ் என்ற பெயர் திரு–புகழ் என்று மாற்ற சொல்லியதால் மாற்றப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரீமா கல்லிங்கல் விவகாரம்! தயாரிப்பாளர் சங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்த மலையாள நடிகர் சங்கம்!!
Next post அரக்கோணம் அருகே பரிதாபம் அம்மாவை அடித்த தந்தை கொலை மகன் கைது